Tuesday, November 3, 2015

நைசா பேசறவனும் , கோபமா பேசறவனும்

.


நைசா பேசறவனை நல்லவன் என்றும் ....
கோபமா பேசறவனை கேட்டவன் என்றும் ....

இந்த உலகத்தில் பல பேர் நினைக்கின்றனர்


ஒருவன் கோபத்தில் நியாயம், மற்றும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
இருந்தால் அந்த கோபம் மிக சிறந்ததே
.


உங்கள் ஈகோ வை விட்டு ஒருவன் ஏன் கோபமாக பேசுகிறான் என்று ஆராயுங்கள் பிறகு
ஒரு முடிவு எடுங்கள்


உங்களிடம் ஒருவன் நீங்கள்  என்ன செய்தலும் சரி என்பவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் நைசாக பேசி உங்களை நாசம் செய்து விடுவான்  சில சமயம் 


Regards
P Renjith Kumar

Friday, October 30, 2015

Who is a real made for each other couples?

.
T
Just had a random thought on love at 4.30 AM in morning, so immediately writing up as I could not resist to write later.


These days I could see many lovers saying "Made for each other" when they love, but eventually when they broke up all these words fly away.
 
In the Tamil movie Raja Rani there is a famous dialogue
"Yarum porakkum bothey ‘Made for Each Other’ ah porakuradhu illa Surya. Vaazhndhu kaaturadhula dhan. " . ( in the movie raja rani )


Which can be see as
" Made for each other means it is not some thing that is determined during birth, it is determined on the way a couples live and show that to the world".

 
So here after if you want to use the term made for each other, use with with more awareness. You cannot become made for each othe just in one day, it is a process, it is a transformation in you.
 
How Made for each other happens?
 
  • First you both will become "Really MAD" for each other, you both will go crazy about each.
  • Both of you will not be worried about being so mad or so crazy or so loving to other and this is where your ego go away and pure love emerges.
  • Your position, education, salary, status all will fade away and it will not be a blocking factor and you see only others love only as the priority.
  • Then later transformation happens and soon you will have un conditional love between each of you. There is no fault finding in pure love, you just love for sake of love. 
  • There is no ego in un conditional love. What is remaining is love between then that's all.
  • When the love is unconditional the divinity blossoms between the couples and it bless them.
  • There is a highest level of trust between both the couples.
  • Then they become made for each other.
  • With their real love they do not hate anyone in their family nor cheat anyone, just love all around them. No hatred, Only Love.
  • They show the world the power of pure love. Divinity is there in that love. It is the purest.
So only if your love have the quality use the term "Made for each other" like that, else ... You know


Regards
P Renjith Kumar

Monday, October 12, 2015

நவராத்ரி ஆரம்பம் : விஜய தசமி – எனது பார்வை

நவராத்ரி ஆரம்பம் : விஜய தசமி – எனது பார்வை

இன்றில் இருந்து  ஒன்பது நாள் நவராத்ரி , பிறகு பத்தாவது நாள் விஜய தசமி
விஜய தசமி, - அதாவது நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரிகள் துர்க்கை அம்மன் மகிசாசூரன் உடன் சண்டை இட்டு தசமி என்னும் பத்தாவது நாளில் விஜயம் என்னும் வெற்றி பெற்ற நாள். சடங்காக பார்த்தால் இந்த நாளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, பொறி கடலை சாப்பிட்டு மகிஷனை வதைப்பது போன்று ஏற்பாடு செய்து முடித்து விடலாம், ஆனால் இது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் வெறும் சடங்கே. அன்று மகிஸாசூரனை துர்க்கை அம்மன் வதைத்தது இன்று நமக்கு எப்படி பயன்படும் என்று கேட்டாலே நம்மில் பல பேருக்கு பதில் தெரியாது அதனால் உண்மையில் இன்று பயனும் இல்லை. வெறும் சடங்காக செய்தால் இப்படி தான் இருக்கும்.


நம்மில் பலருக்கு சில பல விட்டு ஒழிக்க முடியாத கெட்ட பழக்கங்கள் இருக்கலாம், அதை ஒரு அரக்கனாக பாவித்து ஒன்பது நாள் துர்க்கை அம்மன் அருளால்  எதிர்த்து போராடி அதை உங்கள் வாழ்க்கையில இருந்து விலக்கி வெற்றி பெற வேண்டி அதை அம்மன் அருளால் விலக்கி வெற்றி பெற்றால் அது தான் துர்க்கை அம்மன் திருவருளால் அம்மன் நமக்கு தந்த நமக்கே சொந்தமான விஜய தசமி. இப்படி செய்யும் போது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டாகும் நம் வாழ்க்கை உயரும்.


பொதுவாக நவராத்திரி கொலுவில் கீழ படியில் சாதாரண மனிதர் பொம்மை இருக்கும், பிறகு அடுத்த படியில் சில தியாகிகளை வைத்திருப்பார், பிறகு இன்னும் மேலே சென்றால் சான்றோர், சன்யாசிகள் போன்ற தர்மவாங்களை வைப்பர், பிறகு மேலே செல்ல செல்ல தெய்வ நிலை கொண்ட பொம்மைகள் வரும், அதாவது கொலுவில் கீழ படியில் மனிதரை வைத்து ஒவ்வொரு படி உயர தெய்வ நிலையை கூட்டுவது போல நாமமும் தர்ம நெறியுடன் வாழ்கையில் ஒவ்வொரு படியாக மேன்மக்களாய் வாழ துர்க்கை அம்மன் துணை புரிவார்.


துர்க்கை அம்மனே போற்றி


P Renjith kumar

Monday, May 18, 2015

அம்மாவும் அட்டுக்குட்டியும்

.

நானும் என் அம்மாவும் வழக்கமாக ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லுவது வழக்கம், அன்றும் அப்படிதான் என் வீட்டின் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் பின்புறம்வரும் பொழுது
ஒரு சிறு சலசலப்பு , என் அம்மா வண்டியை நிறுத்த சொல்ல, அந்த சலசலப்பு ஒரு கழிவு நீர் டிச்சு உள்ளே இருந்து வந்தது, அது ஒரு அடி உள்ள நீர் தேக்கம் தான். அதில் ஒரு சிறிய அட்டு குட்டி மிகுந்த சத்தம் போட்டு ஓலம் இட்டு
கொண்டு இருந்தது. ஏதோ குடத்தில் உள்ள களிநீரை குடிக்க அதன் தலையை விட்டு குடம் தலையில் சிக்கிகொண்டது இப்போது அதனால் தலையை வெளியில் எடுக்க முடியாமல் ஓலம் இட்டு கொண்டு இருந்தது. அந்த குட்டி ஆட்டின் அருகில் ஒரு பெரிய பெண் ஆடு மற்றும் இரண்டு சிறிய ஆடு செய்வது அரியது நின்று கொண்டு இருந்தது.

என் அம்மா நிற்பதை பார்த்து அங்கு இரு பெண்மணி வந்தனர், அங்கே ஒரு இளைஞனும் இருந்தான், உடனேஅவனை என் அம்மா அட்டை பிடித்து இழுக்க சொன்னார், அது வேலை செய்யவில்லை தலை நன்றாக சிக்கி இருந்தது உடனே ஒரே வழி குடத்தை உடை என்று அம்மா சொன்னார், அந்த இளைஞன் தயங்கவே, தம்பி உயிர் தான் முக்கியம் குடம் போனால் பரவாயில்லை என்றார். உடனே அவன் குடத்தை உடைதான், இப்போது தலை வெளியில் வந்தது இருந்தும் கழுத்தில் அரை குடம் இருந்தது , பார்வை இப்போது தெரிந்ததால் அப்போது தன் அந்த ஆடு கத்துவதை நிறுத்தியது, பிறகு குடத்தை வெளியில் எடுப்பதற்குள் அது உடைந்த குடத்துடனே ஆனந்ந்தமாக ஓடியது   

அதை பார்க்கும் பொது ஒரே சந்தோஷம், அந்த சந்தோசத்துடன் கோவில் சென்று சாமி கும்பிட்டோம்.

P Renjith Kumar

Thursday, April 2, 2015

கட உபநிஷதம்


 
மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது

மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே

எமதர்மனின் பதில்

நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு

நசிகேதனின் பதில்

இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்

நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்

நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை

மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்

மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்

உபநிஷதமும் அதன் தேடல்களும்

.

Renjith Kumar