.
பொதுவாக திங்கள் கிழமை எனக்கு மிகவும் பிரியமானது. சோமவாரம் அதாவது திங்கள் கிழமை சிவனுக்கு உகந்தது என்பதால் இன்னும் பிரியம் . சோமநாதர் என்று ஒரு ஜோதிர் லிங்க பெயரும் கூட அமைந்தது இதன் பெருமையை கூறும்.
அப்படி பட்ட திங்கள் கிழமை நன்னாளில் எந்த ஒரு முக்கியமான செயலும் செய்ய எனக்கு விருப்பம்.
உலக நலன் மட்டுமே சிவன் அருளும் திங்கள் கிழமைகளில் எனது சிந்தனையில் இருக்கும், என்னை பற்றி என்னும் சுயநலம் இருக்காது. உபவாசம் இருக்கும் பெரும் பேரு சிலநாள் எனக்கு சிவன் அருளால் கிட்டும். என் தாயும் உபவாசம் இருக்கும் பேரு சிவன் அருளால் கிட்டும். கோவையில் எனது இல்லம் அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் திருகொவிலுக்கு என் தாயும் தந்தையும் திங்கள் கிழமை நன்னாளில் சென்று வழிபடுவது வழக்கம்.
அப்படி பட்ட திங்கள் கிழமை மார்கழி மாதம் வந்தால் அது இன்னும் விசேஷம் இல்லையா?
எனவே தான் நான் இவ்வளவு நாள் தனியாக தொகுத்து வந்த திருப்பவை மற்றும் திருவெம்பாவை தொடரை மார்கழி திங்கள் - திங்கள் கிழமை அன்று நிறைவு செய்கிறேன்.இந்த தெய்விக பாடல்களின் தொகுப்பு ஒருவருக்கு பயன்பட்டாலும் இதை கடவுளின் அருளாக கருதுவேன்.
அனைவருக்கு சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
உண்மையான பக்திக்கு ஆண்டாள் உதாரணம்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!
என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம் ...
மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு கூறுகிறார்.
**வாழி ஆண்டாள் அன்னையின் திருநாமம்**
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைவாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
சிவ வழிபாடு ...
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி.
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
ஈச்சனாரி விநாயகரே போற்றி
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தொட்டமன் சின்னம்மன் தாயே போற்றி
ஓம் நமோ நாராயணாய
ஒம் நம சிவாய
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
Showing posts with label திருப்பாவை (MP3). Show all posts
Showing posts with label திருப்பாவை (MP3). Show all posts
Monday, January 12, 2015
திருப்பாவை பாசுரம் - 29
.
பாசுரம்
பொருள்
மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
பாசுரம்
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
திருப்பாவை பாசுரம் - 27
.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
பாசுரம்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
திருப்பாவை பாசுரம் - 25
.
பாசுரம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தா¢க்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோ
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
பாசுரம்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தா¢க்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோ
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
திருப்பாவை பாசுரம் - 22
.
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி
உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
பாசுரம்
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி
உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.
Thanks:
http://thiruppavai.pressbooks.com/
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
Thursday, December 16, 2010
மனம் குளிர் மார்கழி - 1
.
இன்று மார்கழி முதல் நாள்
மார்கழி மாதம் தெய்வீகமானது, அதனால் தான் கண்ணன் கீதையில் "மாதங்களில் நான் மார்கழி " என்று கூறினார் .
இந்த அருமையான நேரத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்க திருப்பாவை பாடல்கள் இந்த பதிவில் சேர்க்கப்படும், அனைவரும் இதை கேட்டு தெய்வீக அருள் பெருக.
முதல் இருபது பாசுரம் இங்க கேட்கலாம்
Thirupavai MP3 (Volume 1)
Thirupavai MP3 (Volume 2)
P Renjith Kumar
இன்று மார்கழி முதல் நாள்
மார்கழி மாதம் தெய்வீகமானது, அதனால் தான் கண்ணன் கீதையில் "மாதங்களில் நான் மார்கழி " என்று கூறினார் .
இந்த அருமையான நேரத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்க திருப்பாவை பாடல்கள் இந்த பதிவில் சேர்க்கப்படும், அனைவரும் இதை கேட்டு தெய்வீக அருள் பெருக.
முதல் இருபது பாசுரம் இங்க கேட்கலாம்
Thirupavai MP3 (Volume 1)
Thirupavai MP3 (Volume 2)
P Renjith Kumar
Subscribe to:
Posts (Atom)
