Wednesday, May 25, 2011

பொறுமை

.
ஒரு ஊரில் ஒரு பத்து வயது ஆன சுட்டி பெண் ஒருவள் இருந்தாள் தினமும் கல்வி மற்றும் விளையாட்டு என்று காலம் சென்றது, ஒருநாள் அவள் கேள்விப்பட்டது என்னவென்றால் கடவுள் மனிதர்களுக்கு ஒரு ஆப்பிள் பழம் தருகிறார் என்று, ஆனால் அதற்காக சுவர்க்கம் வரை சென்று காத்திருக்க வேண்டும் என்று கேள்விபட்டாள், உடனேயே அவளும் ஆப்பிள் பழம் கடவுள் கையால் வாங்க புறப்பட்டாள், பல நாட்கள் கழித்து சுவர்க்கம் வந்து சேர்ந்தாள் . மிக பெரிய மக்கள் வரிசை ஆப்பிள் வாங்க காத்து கிடந்துது, அதை கண்டு மலைத்து போனாள் .. பிறகு எப்படியாவது ஆப்பிள் வாங்க வேண்டும் என்று அவளும் வரிசையில் நின்று ஆப்பிள் வாங்க ஆவளோடு காத்திருந்தாள், அவள் கடவுள் அருகில் வந்தாள் .. கடவுள் கொடுக்கும் ஆப்பிள் வாங்கும் பொது ஆப்பிள் அந்த சின்னம் சிறிய கைக்குள் சிக்காமாலையே கிழே விழுந்தது, அதை அவளால் எடுக்க முடியவில்லை, பிறகு சிறிது நேரம் கழித்து கடவுளிடம் இருந்த தேவதைகள் அவளை பார்த்து “உன்னக்கு மீண்டும் ஆப்பிள் வேண்டும் என்றால் நீ மீண்டும் வரிசையில் வர வேண்டும்” என்று கூறினார்கள். அதை கேட்ட சின்ன குழந்தை, “நான் பூமியில் இருந்து இவ்வளவு நாட்கள் நடந்து வந்தது கடவுள் கையால் ஆப்பிள் வாங்க தான் , அனால் இன்று அது எவ்வாறோ தவறி விழுந்து விட்டது, எனினும் நான் இங்கு மீண்டும் வரிசையில் சென்று கடவுள் கையால் ஆப்பிள் வாங்க வேண்டும் அது தான் என் ஆசை” என்று மீண்டும் வரிசியில் கடைசி ஆளாக செண்டு நின்றாள். பிறகு அந்த பெண் ஆப்பிள் வாங்கி வருவோர் எல்லோரையும் பார்த்தாள், அவள் பார்த்த எல்லோரும் ஆப்பிள் பழத்தை கிழே போடாமல் கொண்டுவருவதை பார்த்து தன் சிறிய கையை நினைத்து வருந்தினாள், இந்த முறை எப்படியாவது ஆப்பிள் பழத்தை கீழே போடாமல் இருக்கவேண்டும் என்று அதை பற்றி பலமாக சிந்தித்து வந்தாள் ... கடவுள் அருகில் வந்தவுடன் தன் கையை நன்று இறுக்கமாக வைத்து கொண்டாள், கடவுளிடம் கையை நீட்டினாள் ...கடவுள் அவளை பார்த்து, அவள் தலையை தடவி, “மகளே சென்ற முறை நீ வந்த போது நான் அறியமால் உன்னக்கு பழைய மற்றும் சிறிது கேட்டு போன ஆப்பிள் பழத்தை கொடுத்து விட்டேன், அதை கண்டவுடன், நான் அதை கீழே விழும்படி செய்து விட்டேன், பிறகு உனக்காக மிகவும் வருந்தினேன், அதனால் அடுத்த முறை உன்னக்கு உலகிலேயிய மிக சிறந்த பழம் தான் தரவேண்டும் என்று முடிவு செய்தேன்... அந்த பழம் விளைய சிறிது காலம் தேவை பட்டது, அதன் காரணமாக தேவதைகள் மூலமாக உன்னை வரிசையில் சிறிது நாள் காக்க சொன்னேன், நீயும் அவ்வாறே செய்தாய் ... இதோ இப்போது நான் கொடுக்கும் இந்த பழம் உலகிலேயே இதுவரை இருந்த ஆப்பிள் பலத்திலேயே சிறந்த ஆப்பிள், இதை பெற்றுகொள் என் அன்பு மகளே ” என்றார் ... அவள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தால்.. இந்த முறை ஆப்பிள் கீழே விழவில்லை.. அவள் ஆனந்தத்தில் திளைத்து பூமி வந்தாள் ..


அதாவது நீங்கள் உங்கள் 100% முழு முயற்சியையும் ஒரு செயலில் போட்டு அதன் பிறகும்  உங்களுக்கு தோல்வி வந்தால் துவள வேண்டாம் அது காலம் கடந்து சென்றால் வருந்த வேண்டாம் ... உங்களுக்காக கடவுள் மிக சிறந்ததை கொடுக்க காத்திருக்கிறார் .. பொறுமையுடன், முழு திறமையுடன் நம்பிக்கை தளராது  உங்கள் செயலை செய்து வாருங்கள் .. உங்கள் பொறுமை ஒருநாள் உங்களுக்கு அதன் பலனை தரும்..

By
P Renjith Kumar