Wednesday, December 31, 2014

திருவெம்பாவை பாடல் - 17 (திருவண்ணாமலையில் அருளியது)

.
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்



வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !
சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு
ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும்
எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,
நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர்
இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத்
தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடைய
நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,
நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த
இந்நீரில் பாய்ந்தாடுவோம் !

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 17

.
 
 
 
பாசுரம்
 
 
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ
நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்.
 
 
__சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.__
 
 
 
பொருள்
எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு !
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான்
நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்
எனவே, அவனை துயிலெழுப்ப (பாட) தூய்மையுடன் வந்துள்ளோம்
முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள
கதவை திறந்து எங்களை உள்ளேவிடு
 
Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 16 (திருவண்ணாமலையில் அருளியது)

.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த்
திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப்
போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின்
மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின்
திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும்
எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடு
தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள்
என்பது போலப் பொழிக !

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 16


.
 
 
பாசுரம்
 
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ
நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
__சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.__
 
 
எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு !
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான்
நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்
எனவே, அவனை துயிலெழுப்ப (பாட) தூய்மையுடன் வந்துள்ளோம்
முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள
கதவை திறந்து எங்களை உள்ளேவிடு
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 15 (திருவண்ணாமலையில் அருளியது)

.
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்


அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி,
நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும்
உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான
கண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும்
அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !
வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால்
இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்
வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,
கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான,
மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 15

.

 
 
 
பாசுரம்
 
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;

வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை  மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்
 
பொருள்
 
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்._
_
[எழுப்புபவர்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?
[எழுந்திருப்பவர்] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[எழுப்புபவர்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[எழுந்திருப்பவர்] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[எழுப்புபவர்] நீ உடனே புறப்பட்டு வா வேறு என்ன வேலை இருக்கிறது ?
[எழுந்திருப்பவர்] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[எழுப்புபவர்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார்.
குவலயாபீட யாணையையும் கம்சன் முதலிய பகைவர்களையும்
அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா

Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

Monday, December 29, 2014

திருவெம்பாவை பாடல் - 14 (திருவண்ணாமலையில் அருளியது)

.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்


காதில் அணிந்துள்ள குழைகள் ஆட,
பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,
(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச்
திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை -
சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின்
பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி
வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக்
கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற
வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும்
ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை
வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும்
பாடி நீராடுங்கள் !

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 14

.
 
 
பாசுரம்
 
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!  எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன
அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன
காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள்
தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள்
எங்களை முன்னதாக ஏழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே
வெட்கமில்லாதவளே, பேச்சு மட்டும் இனிமையாக பேசுபவளே !
சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய
கமலக்கண்ணனை பாட வேண்டும் எழுந்திரு
 
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
 

Sunday, December 28, 2014

திருவெம்பாவை பாடல் - 13 (திருவண்ணாமலையில் அருளியது)

.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்


குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,
சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,
தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,
எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது
போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,
நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து
ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,
தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 13

.
 
 
 
பாசுரம்
 
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து — ஏலோர் எம்பாவாய்.
 
பொருள்
 
பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும்
கொடிய இராவணனுடய தலையைக் கிள்ளியெறிந்த திருமாலைப் பாடிக்கொண்டு
பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள்.
சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது.
பறவைகள் கூவுகின்றன பூப்போன்ற மான்கண் உடையவளே
உடல் குளிர நீராடாமல் படுத்து கிடக்கிறாயோ?
நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு
எங்களுடன் வந்து கலந்துவிடு

Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 12 (திருவண்ணாமலையில் அருளியது)

.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்


பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக
நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி
ஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம்
எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும்
வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும்,
மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள்
ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில்  ஈசனின்
பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !

குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 12

.
 
 
 
பாசுரம்
 
கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம்
நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.
 

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

 

திருவெம்பாவை பாடல் - 11 (திருவண்ணாமலையில் அருளியது)

.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்


வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm


 Regards
 P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 11

.

 
 
 
பாசுரம்
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்

குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவா
 
பொருள்
 
இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்
பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!
பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா
உறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்
உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.
அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே!
உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 10 (திருவண்ணாமலையில் அருளியது)

.
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்


அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும்
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm


 Regards
 P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 10

.
 
 
 
பாசுரம்
 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன்  நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்;  பண்டு ஒருனாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
நோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்
யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்
தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 9 (திருவண்ணாமலையில் அருளியது)

.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்


பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான
நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே
நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்
பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்
எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm
 Regards
 P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 9

.

 
 
பாசுரம்
தூமணி மாடத்துக் சுற்றும் விளக்கொ¢யத்
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ?  உன் மகள் தான்
ஊமையோ? அன்றிக் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு
அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள்
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது
சீக்கிரம் உன் மகளை எழுப்பு
 

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 8 (திருவண்ணாமலையில் அருளியது)

.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.


தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

 Regards
 P Renjith Kum

திருப்பாவை பாசுரம் - 8

.
 
 
 
பாசுரம்
 
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி
உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்
நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்
 

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 7 (திருவண்ணாமலையில் அருளியது)

.
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்


தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!
பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று
சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி
முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம்
கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 7

.
 
 
 
 
பாசுரம்
 
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட
கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
 
 

திருவெம்பாவை பாடல் - 6 (திருவண்ணாமலையில் அருளியது)

.

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.




தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா
பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்
அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி
நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய
கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்
தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான
சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 6

.
 
 
 
 
 
பாசுரம்
 
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி  என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில்  வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி  வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான்
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

Saturday, December 20, 2014

திருவெம்பாவை பாடல் - 5 (திருவண்ணாமலையில் அருளியது)

.

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.


தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 5

.

திருப்பாவை ஐந்தாம் நாள்

 
 
 
பாசுரம்
 
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர்  யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு — ஏலோர் எம்பாவாய்.
 
 
பொருள்
 
மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால்
நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும்
அகவே அவன் நாமங்களைச் சொல்
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

Friday, December 19, 2014

திருவெம்பாவை பாடல் - 4 (திருவண்ணாமலையில் அருளியது)

.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.


தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே !
இன்னுமா விடியவில்லை ?
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?
தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும்
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

Regards
P Renjith Kumar

திருப்பாவை பாசுரம் - 4

.
திருப்பாவை நான்காம் நாள்

 
 
 
 
பாசுரம்
ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.
 
 
வருணதேவனே! சிறுதும்ஒளிக்காமல்
கடலில்புகுந்துநீரைமொண்டுஇடிஇடித்துஆகாயத்தில்ஏறி
திருமாலின்திருமேனிபோல்கறுப்பாகி
அழகானதோள்கொண்டபத்பநாபன்கையில்
உள்ளசக்கரம்போல்மின்னலடித்து, அவனுடையசங்கம்போல்அதிர்ந்துமுழங்க
உன்னுடையவில்லாகியசார்ங்கம்வீசியபாணங்கள்போல்மழைபெய்து
உலகம்அனைத்தும்வாழ, நாங்களும்
மகிழ்ந்துமார்கழிநோன்புக்குநீராடுவோம்
 
Regards
P Renjith Kumar

திருவெம்பாவை பாடல் - 3 (திருவண்ணாமலையில் அருளியது)

.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.




தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.
P Renjith Kumar//ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 3

.

திருப்பாவை மூன்றாம் நாள் , இது ஒரு முக்கியமான பாசுரம்

 
 
 
 
பாசுரம்
 

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்
 
பொருள்
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி
நாம் நோம்பிற்கு நீராடினால்
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்)
செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று
வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

Wednesday, December 17, 2014

திருவெம்பாவை பாடல் - 2 (திருவண்ணாமலையில் அருளியது)


திருவெம்பாவை பாடல் - 2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2


தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !
போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar


திருப்பாவை பாசுரம் - 2

.
மார்கழி 2 ஆம் நாள்

திருப்பாவை பாசுரம் - 2

 
 
 
 
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு
எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்
 
 
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்
இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar


திருவெம்பாவை பாடல் - 1 (திருவண்ணாமலையில் அருளியது)

.
திருவெம்பாவை பாடல் - 1


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1


தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே !
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.


Thanks:http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar/ப ரஞ்சித் குமார்


Monday, December 15, 2014

திருப்பாவை பாசுரம் - 1

.
இன்று மார்கழி முதல் நாள் ...முப்பது பாசுரமும் ஒவ்வொன்றாக முப்பது நாளில் இங்கு பதிவு செய்யப்படும் 

ஓம் நமோ நாராயணா ...

 
திருப்பாவை முதல் பாடல்


 

 
 
முதல் பாடல்

ஆயர்பாடிக் கன்னிகைகளில் சீலர் மற்றைக் கன்னிமார்களை
நோன்பு நோற்க அழைப்பது......


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர் ! போதுமினோ, நேரிழையீர் ! 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !
கூர்வேல் - கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்;
ஏரார்த்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்

விளக்கம்
ஆய்ப்பாடிச் சிறுமிகளே ! ஸ்ரீமத் நாராயணனாகிய கண்ணனே நமது நோன்புக்கு வேண்டியவற்றைத் தருவான், நமக்கே விருப்பத்தை நிறைவேற்றச் சித்தமாயிருக்கின்றான். இந்த மார்கழித் திங்களில் மதிநிறைந்த இந்நாள் நன்னாளாக வய்த்திருக்கின்றது.

கண்ணன் அருள்பெறத் தக்க காலம் இதுவென்று மாதத்தையும் பட்சத்தையும் நாளையும் கொண்டாடுகிறார்கள். ஒருவரையொருவர்முகங்கண்டு களிக்கவும், எல்லோரும் சேர்ந்து சென்று கண்ணனைத் துயில் உணர்த்தவும் மதிநிறைந்த இந்நாள் நன்னாளாக வய்த்திருக்கின்றது.

தாபம் தீர நீராட வருங்கள் என்ற அழைப்பிலே, கண்ணனைப் பிரிந்திருந்த தாபம் தீர அவனுடைய அன்பையும் அருளையும் பெறுவோம் என்பது குறிப்பு. " வருகிறவர்கள் எல்லோரும் வரலாம் " என்று சொல்வது போல் அமைந்திருக்கின்றது ' போதுவீர் ! போதுமினோ ' என்ற அழைப்பு.
பால், நெய் முதலியனவற்றில் சிறப்புமட்டுமல்ல ஆய்ப்பாடியின் சீர், கண்ணன் வளரும் நீர்மையும் சீர்மையும் தனிப்பெருஞ்சிறப்பல்லவா ?இங்குள்ள செல்வச் சிறுமியர் ஸ்ரீ கிருஷ்ண கடாட்சமாகிய அன்புச் செல்வத்திற்கு உரியவர்.

பசும்புல்லும் சாக மிதியாத பரமசாதுவாகிய நந்தகோபர், பிள்ளைமீதுள்ள பேரன்பினால் ' என்ன ஆபத்து வருகிறதோ ? ' என்று வேலைச் சாணைபிடித்துக் ' கொடுந்தொழிலுக்கும் ' சித்தமாகிறார். யசோதையோ அந்த அழகிய பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டிருக்கையிலே, தன் அழகிய கண்களில் மேன்மேலும் ஆழகு நிறைந்து குடிகொண்டிருக்கும் பேறு பெறுகின்றாளாம்.

சகல தாபங்களும் ஆறும்படியான வடிவழகைக் ' கார்மேனி ' என்றும், காதலாகிக் கசிந்து குளிர நோக்குகின்ற கண்களைச் " செங்கண் " என்றும். குறிப்பிடுகிறார்கள். தேஜசும் குளிர்ச்சியும் ஒருங்கே அமைந்த திருமுக மண்டலத்தைக் " கதிர்மதியம்போல் முகம் " என்று வருணிக்கிறார்கள்.
நோன்புக்கு வேண்டிய வாத்தியங்களில் ஒன்று ' பறை ' , இது வியாஜம், நோக்கம் கண்ணனோடு உறவுகொண்டு அவனுக்கே பணி செய்வது.நீராடுவதையும் வியாஜமாகக் கொண்டு கண்ணனைத் தானே அடைய விரும்புகிறார்கள்.

" பார் " உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆயர்பாடியயையும் குறிக்கும். கண்ணனுடன் தோழமை கூடாதென்று தடுத்திருந்த ஆயர்குல முதியவர்களே புகழும்படி கண்ணனே உபசரணங்களை உதவப் பெண்கள் நோன்பில் இறங்குகிறார்கள்.

Source and Thanks: Sriram-Krishnaswamy (FB)

ப ரஞ்சித் குமார்

Saturday, December 13, 2014

கம்ப ராமாயணம் - சிறப்பான பாடல்கள் - 1


.

ராமனுடைய அற்புத குணத்தை சொல்லும் இந்த பாடல்  எனக்கு மிகவும் பிடித்தது .இதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன , நவீன நிர்வாக சாரம் கூட இதில் உள்ளது , படித்து ஆராய்ந்தால் உங்களுக்கு புரியும்




           ‘ “  ஆழி சூழ் உலகம் எல்லாம்
                     பரதனே ஆள, நீ போய்த்
                 தாழ் இருஞ் சடைகள் தாங்கி,
                     தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
                 பூழி வெங் கானம் நண்ணி,
                    புண்ணியத் துறைகள் ஆடி,
                 ஏழ் - இரண்டு ஆண்டின் வா” என்று,
                     இயம்பினன் அரசன்’ என்றாள்.




‘ஆழி சூழ் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும்;

பரதனே ஆள- பரதனே முடிசூடி ஆண்டுகொண்டிருக்க;நீபோய் - நீ நாட்டை விட்டுச் சென்று; 

தாழ் இருஞ் சடைகள் தாங்கி -  தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக்கொண்டு; 

தாங்க அருந் தவம் மேற்கொண்டு - தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று; 

பூழி வெம் கானம் நண்ணி - புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து; 

புண்ணியத் துறைகள் ஆடி - புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி; 

ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று - பதினான்குஆண்டுகள் கழித்த பின்பு திரும்பிவருவாய் என்று;

அரசன் இயம்பினன் என்றாள் - அரசன்கொன்னான் என்றாள்.


  இது, கைகேயியின் மனத்தையும் அவள் பேச்சின் நயத்தையும்
காட்டுகிறது. பரதனே என்பதில்உள்ள பிரிநிலை ஏகாரம் அவள்
ஆசையைக் காட்டுகிறது.  தாழ்இருஞ் சடை  தாங்குதல்,  தவம்
மேற்கொள்ளல்,  கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய
நற்பயன்கள் கிட்டவேஅரசன் இவ்வாறு பணித்தான் என்று கூறித் தான்
வரங்கேட்டதை மறைத்தலின் அவளது  வஞ்சகம்தெரிகிறது.  பதினான்கு
ஆண்டுகள் என்னாது  ‘ஏழ் இரண்டு ஆண்டு’  என்று சுருக்கிக் கூறுதல்
அவளது கரவுப் பேச்சைப் புலப்படுத்துகிறது. தான் பழியற்றவள் என்பதைக்
காட்டுவதற்காக ‘இயம்பினன்அரசன்’  என்றாள். 

மேலும் தந்தை என்னாது அரசன் கூறினான் என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது     என்பதைச் சுட்டினாள்





அதற்கு மிக அழகாக பதில் கொடுத்த ராமன்


     ‘மன்னவன் பணி அன்றாகின்,
         நும் பணி மறுப்பெனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம்
     அடியனேன் பெற்றது அன்றோ?
   என் இனி உறுதி அப்பால்?
     இப் பணி தலைமேல் கொண்டேன்;
  மின் ஒளிர் கானம் இன்றே
     போகின்றேன்; விடையும்             கொண்டேன்.’
 

‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று     என்றாலும்; 
 
நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான்     செய்யமாட்டேன் என்பேனோ?;

என் பின்னவன்பெற்ற செல்வம் - என்     தம்பி பரதன் அடைந்த பேறு; 

அடியனேன் பெற்றது அன்றோ -நான்     அடைந்தது அன்றோ?;

அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான     நன்மை வேறுயாது?; 

இப் பணி தலைமேல் கொண்டேன் -  இக்கட்டளையைத் லையின்மேல்ஏற்றுக்கொண்டேன்; 

மின் ஒளிர்     கானம் - மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு; 

இன்றே     போகின்றேன் - இப்பொழுதே போகின்றேன்; 

விடையும்கொண்டேன் -  நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன். 


அரசன் கட்டளையிட வேண்டும் என்பதில்லை; தமது (கைகேயி) கட்டளையே     போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன்.




Regards
P Renjith Kumar