Monday, December 29, 2014

திருப்பாவை பாசுரம் - 14

.
 
 
பாசுரம்
 
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!  எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன
அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன
காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள்
தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள்
எங்களை முன்னதாக ஏழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே
வெட்கமில்லாதவளே, பேச்சு மட்டும் இனிமையாக பேசுபவளே !
சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய
கமலக்கண்ணனை பாட வேண்டும் எழுந்திரு
 
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
 

No comments: