Friday, December 19, 2014

திருப்பாவை பாசுரம் - 4

.
திருப்பாவை நான்காம் நாள்

 
 
 
 
பாசுரம்
ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.
 
 
வருணதேவனே! சிறுதும்ஒளிக்காமல்
கடலில்புகுந்துநீரைமொண்டுஇடிஇடித்துஆகாயத்தில்ஏறி
திருமாலின்திருமேனிபோல்கறுப்பாகி
அழகானதோள்கொண்டபத்பநாபன்கையில்
உள்ளசக்கரம்போல்மின்னலடித்து, அவனுடையசங்கம்போல்அதிர்ந்துமுழங்க
உன்னுடையவில்லாகியசார்ங்கம்வீசியபாணங்கள்போல்மழைபெய்து
உலகம்அனைத்தும்வாழ, நாங்களும்
மகிழ்ந்துமார்கழிநோன்புக்குநீராடுவோம்
 
Regards
P Renjith Kumar

No comments: