Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் - 10

.
 
 
 
பாசுரம்
 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன்  நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்;  பண்டு ஒருனாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
நோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்
யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்
தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக
 
Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: