Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் - 9

.

 
 
பாசுரம்
தூமணி மாடத்துக் சுற்றும் விளக்கொ¢யத்
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ?  உன் மகள் தான்
ஊமையோ? அன்றிக் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று — ஏலோர் எம்பாவாய்
 
 
பொருள்
 
தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு
அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள்
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது
சீக்கிரம் உன் மகளை எழுப்பு
 

Thanks:http://thiruppavai.pressbooks.com/
 
Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: