Tuesday, November 3, 2015

நைசா பேசறவனும் , கோபமா பேசறவனும்

.


நைசா பேசறவனை நல்லவன் என்றும் ....
கோபமா பேசறவனை கேட்டவன் என்றும் ....

இந்த உலகத்தில் பல பேர் நினைக்கின்றனர்


ஒருவன் கோபத்தில் நியாயம், மற்றும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
இருந்தால் அந்த கோபம் மிக சிறந்ததே
.


உங்கள் ஈகோ வை விட்டு ஒருவன் ஏன் கோபமாக பேசுகிறான் என்று ஆராயுங்கள் பிறகு
ஒரு முடிவு எடுங்கள்


உங்களிடம் ஒருவன் நீங்கள்  என்ன செய்தலும் சரி என்பவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் நைசாக பேசி உங்களை நாசம் செய்து விடுவான்  சில சமயம் 


Regards
P Renjith Kumar

Friday, October 30, 2015

Who is a real made for each other couples?

.
T
Just had a random thought on love at 4.30 AM in morning, so immediately writing up as I could not resist to write later.


These days I could see many lovers saying "Made for each other" when they love, but eventually when they broke up all these words fly away.
 
In the Tamil movie Raja Rani there is a famous dialogue
"Yarum porakkum bothey ‘Made for Each Other’ ah porakuradhu illa Surya. Vaazhndhu kaaturadhula dhan. " . ( in the movie raja rani )


Which can be see as
" Made for each other means it is not some thing that is determined during birth, it is determined on the way a couples live and show that to the world".

 
So here after if you want to use the term made for each other, use with with more awareness. You cannot become made for each othe just in one day, it is a process, it is a transformation in you.
 
How Made for each other happens?
 
  • First you both will become "Really MAD" for each other, you both will go crazy about each.
  • Both of you will not be worried about being so mad or so crazy or so loving to other and this is where your ego go away and pure love emerges.
  • Your position, education, salary, status all will fade away and it will not be a blocking factor and you see only others love only as the priority.
  • Then later transformation happens and soon you will have un conditional love between each of you. There is no fault finding in pure love, you just love for sake of love. 
  • There is no ego in un conditional love. What is remaining is love between then that's all.
  • When the love is unconditional the divinity blossoms between the couples and it bless them.
  • There is a highest level of trust between both the couples.
  • Then they become made for each other.
  • With their real love they do not hate anyone in their family nor cheat anyone, just love all around them. No hatred, Only Love.
  • They show the world the power of pure love. Divinity is there in that love. It is the purest.
So only if your love have the quality use the term "Made for each other" like that, else ... You know


Regards
P Renjith Kumar

Monday, October 12, 2015

நவராத்ரி ஆரம்பம் : விஜய தசமி – எனது பார்வை

நவராத்ரி ஆரம்பம் : விஜய தசமி – எனது பார்வை

இன்றில் இருந்து  ஒன்பது நாள் நவராத்ரி , பிறகு பத்தாவது நாள் விஜய தசமி
விஜய தசமி, - அதாவது நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரிகள் துர்க்கை அம்மன் மகிசாசூரன் உடன் சண்டை இட்டு தசமி என்னும் பத்தாவது நாளில் விஜயம் என்னும் வெற்றி பெற்ற நாள். சடங்காக பார்த்தால் இந்த நாளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, பொறி கடலை சாப்பிட்டு மகிஷனை வதைப்பது போன்று ஏற்பாடு செய்து முடித்து விடலாம், ஆனால் இது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் வெறும் சடங்கே. அன்று மகிஸாசூரனை துர்க்கை அம்மன் வதைத்தது இன்று நமக்கு எப்படி பயன்படும் என்று கேட்டாலே நம்மில் பல பேருக்கு பதில் தெரியாது அதனால் உண்மையில் இன்று பயனும் இல்லை. வெறும் சடங்காக செய்தால் இப்படி தான் இருக்கும்.


நம்மில் பலருக்கு சில பல விட்டு ஒழிக்க முடியாத கெட்ட பழக்கங்கள் இருக்கலாம், அதை ஒரு அரக்கனாக பாவித்து ஒன்பது நாள் துர்க்கை அம்மன் அருளால்  எதிர்த்து போராடி அதை உங்கள் வாழ்க்கையில இருந்து விலக்கி வெற்றி பெற வேண்டி அதை அம்மன் அருளால் விலக்கி வெற்றி பெற்றால் அது தான் துர்க்கை அம்மன் திருவருளால் அம்மன் நமக்கு தந்த நமக்கே சொந்தமான விஜய தசமி. இப்படி செய்யும் போது நமக்கும் துர்க்கை அம்மனுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டாகும் நம் வாழ்க்கை உயரும்.


பொதுவாக நவராத்திரி கொலுவில் கீழ படியில் சாதாரண மனிதர் பொம்மை இருக்கும், பிறகு அடுத்த படியில் சில தியாகிகளை வைத்திருப்பார், பிறகு இன்னும் மேலே சென்றால் சான்றோர், சன்யாசிகள் போன்ற தர்மவாங்களை வைப்பர், பிறகு மேலே செல்ல செல்ல தெய்வ நிலை கொண்ட பொம்மைகள் வரும், அதாவது கொலுவில் கீழ படியில் மனிதரை வைத்து ஒவ்வொரு படி உயர தெய்வ நிலையை கூட்டுவது போல நாமமும் தர்ம நெறியுடன் வாழ்கையில் ஒவ்வொரு படியாக மேன்மக்களாய் வாழ துர்க்கை அம்மன் துணை புரிவார்.


துர்க்கை அம்மனே போற்றி


P Renjith kumar

Monday, May 18, 2015

அம்மாவும் அட்டுக்குட்டியும்

.

நானும் என் அம்மாவும் வழக்கமாக ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லுவது வழக்கம், அன்றும் அப்படிதான் என் வீட்டின் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் பின்புறம்வரும் பொழுது
ஒரு சிறு சலசலப்பு , என் அம்மா வண்டியை நிறுத்த சொல்ல, அந்த சலசலப்பு ஒரு கழிவு நீர் டிச்சு உள்ளே இருந்து வந்தது, அது ஒரு அடி உள்ள நீர் தேக்கம் தான். அதில் ஒரு சிறிய அட்டு குட்டி மிகுந்த சத்தம் போட்டு ஓலம் இட்டு
கொண்டு இருந்தது. ஏதோ குடத்தில் உள்ள களிநீரை குடிக்க அதன் தலையை விட்டு குடம் தலையில் சிக்கிகொண்டது இப்போது அதனால் தலையை வெளியில் எடுக்க முடியாமல் ஓலம் இட்டு கொண்டு இருந்தது. அந்த குட்டி ஆட்டின் அருகில் ஒரு பெரிய பெண் ஆடு மற்றும் இரண்டு சிறிய ஆடு செய்வது அரியது நின்று கொண்டு இருந்தது.

என் அம்மா நிற்பதை பார்த்து அங்கு இரு பெண்மணி வந்தனர், அங்கே ஒரு இளைஞனும் இருந்தான், உடனேஅவனை என் அம்மா அட்டை பிடித்து இழுக்க சொன்னார், அது வேலை செய்யவில்லை தலை நன்றாக சிக்கி இருந்தது உடனே ஒரே வழி குடத்தை உடை என்று அம்மா சொன்னார், அந்த இளைஞன் தயங்கவே, தம்பி உயிர் தான் முக்கியம் குடம் போனால் பரவாயில்லை என்றார். உடனே அவன் குடத்தை உடைதான், இப்போது தலை வெளியில் வந்தது இருந்தும் கழுத்தில் அரை குடம் இருந்தது , பார்வை இப்போது தெரிந்ததால் அப்போது தன் அந்த ஆடு கத்துவதை நிறுத்தியது, பிறகு குடத்தை வெளியில் எடுப்பதற்குள் அது உடைந்த குடத்துடனே ஆனந்ந்தமாக ஓடியது   

அதை பார்க்கும் பொது ஒரே சந்தோஷம், அந்த சந்தோசத்துடன் கோவில் சென்று சாமி கும்பிட்டோம்.

P Renjith Kumar

Thursday, April 2, 2015

கட உபநிஷதம்


 
மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது

மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே

எமதர்மனின் பதில்

நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு

நசிகேதனின் பதில்

இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்

நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்

நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை

மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்

மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்

உபநிஷதமும் அதன் தேடல்களும்

.

Renjith Kumar

Saturday, March 21, 2015

யோனிப் பொருத்தம் - உண்மை விளக்கம் .

.
யோனி பொருத்தம் - உண்மை விளக்கம் .

இன்று பல நுனிப்புல் மேயும் போலி ஜோதிடர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் அபலை பெற்றோர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது.

பல படித்த பெற்றோர்களை நான் பார்த்துள்ளேன், அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் இருந்தாலும் கூட பள்ளிக்கூடம் கூட எட்டி பார்க்காத ஒரு ஜோதிடர் சொல்லுவதை கேட்டு வேத வாக்காக எடுத்து விடுகின்றனர் நல்ல வரனை தட்டி களிக்கின்றனர் .

அதே சமயம் படிக்காமல் இருக்கும் பலர் ஜோதிடம் எனக்கு முக்கியம் இல்லை என் மகன் அல்லது மகள் சந்தோஷம் தான் முக்கியம் என்று உதறி தள்ளும் படிக்காத மேதைகளும் உண்டு.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

இன்று திருமண பொருத்தம் பார்க்கும் பொது யோனி பொருத்தம் என்ற ஒன்று இல்லை என்றால் , ஜாதகம் சரிஇல்லை வேண்டாம் என்று சொல்லும் பல மூட ஜோதிடர்கள் உண்டு அதை நம்பி பல நல்ல சம்பந்தத்தை இழக்கும் அப்பாவி பெற்றோகளும் உண்டு.அவர்களுக்கவே இந்த பதிவு.

ஜோதிர்களை திருத்த முடியாது அது அவர்கள் பிழைப்பு (ஏமாற்றுபவர்கள் எபோதுமே உலகத்தில் உள்ளனர்) .... ஆனால் நாம் உண்ணாமையை ஆராயலாம்... அதற்கு நாம் சில நூறு வருடம் பின் சென்று பார்க்க வேண்டும்...

இப்போதும் கூட சில கிராமங்களில் பெண்ணும் ஆணும் நேராக பார்க்காமல் திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி இருக்கும் பொது ஒரு முன்னுறு ஆண்டுகுளுக்கு முன் நாம் செல்வதாக சிந்தித்து பாருங்கள்.

திருமணம் --- சில நூற்றண்டுகுளுக்கு முன்பு ஒரு பார்வை

அப்போது ...
  • பேருந்து வசதி கிடையாது
  • புகைப்படம் பார்க்கும் வைப்பு கிடையாது
  • பெண்ணை நேராக பார்க்க கூடாது
  • தொலைபேசி வழி தொடர்பு கிடையாது 
  • அப்போது திருமணம் எனபது முக்கியகமாக வியாபரம் கிடையாது

ஒரு பெண் பதினாறு வயது கடந்தாலே அது திருமணத்திற்கு அதிக வயது ( முப்பது வருடம் மும்பு வந்த பாரதிராஜா படம் கூட பதினாறு வயதிலே என்ற பெயர் உண்டு , அப்போது யோசித்து பாருங்கள், நாம் இன்னும் மூநூறு ஆண்டு பின்பு இருகின்றோம் )
ஒரு ஆணுக்கு இருபது வயதே திருமண நடக்க அதிகம்.வரவேண்டிய வயது.

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஒருவரை ஒருவர் பார்க்காமல் எவ்வாறு திருமணம் செய்வது , எவ்வாறு இருவரின் எடை, உயரம் இவற்றை அளப்பது, இதற்கு ஓரளவிற்கு உதவிய ஒரு புள்ளி விவரம் தான் யோனி பொருத்தம்.

அதாவது சித்திரை நட்ச்சதிரம் என்றால் பொதுவாக ஒல்லியாக இருப்பார்கள் என்று அதற்கு ஒரு மிருகம் பெயர் கொடுத்து விட்டனர். அதே போன்று சம உடல் வாகு உடைய பிற நட்ச்சதிரம் நட்பான மிருக பெயரை கொடுத்தனர், நட்பு மிருகம் என்றால் இடை, உயரம் பொருந்தும் எனவே ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என்ற ஒரு கணக்கு தான். அனால் புள்ளி விவரம் எப்போதும் சரியாய் இருபதில்லை , அதிலும் சிற தவறுகள் இருக்கும்.

இந்த சூழலில் ....
 
ஆண் மற்றும் பெண் உடல் வாகு, எடை ஆகியவற்றை கணக்கு இடுவதற்கு ஓரளவிற்கு துணை புரிய வந்தது தன் இந்த யோனி பொருத்தம்,
அதாவது இந்த நட்சதிரம் ஆண் இந்த யோனி வகை என்றால் அவன் ஒல்லியாக இருப்பான, குண்டாக இருப்பான் , எனவே ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும் என்ற கணக்கு பார்க்க உதவியது இன்று வேறு மாதிரி ஆகிவிட்டது.

இன்றும் ஒரு எனபது வயதான ஜோதிடருக்கு கூட ஏன் ஒரு நட்சத்திதிற்கு ஒரு மிருகம் பெயர் உண்டு, அதன் பின்னணி என்ன என்று கேட்டல் பதில் தெரியாது , ஆனால் யோனி பொருத்தம் கட்டாயம் வேண்டும் என்பார்கள்.
எனவே பெண்ணை ஆண் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு இருக்கும் இந்த காலத்தில் இந்த யோனி பொருத்தம் எல்லாம் குப்பையில் தூக்கி போடா வேண்டியவை...

யோனி பொருத்தம் பார்கவில்லை ... மனம் உருதுமே ... அப்போது எப்படி திருமணத்தை தீர்மானிப்பது ....
 
யோனி பொருத்தம் சொல்வதை கட்டிலும் அதன் சாரம்சத்தை உணர்த்தும் பொருத்தம் இப்போது பாருங்கள்....
 
திருமணம் செய்ய முக்கியமான பொருத்தம் - யோனி பொருத்தம் சொல்லும் சாராம்சம் இதில் வந்து விடும் நூறு சதவிகிதம்.

ஒரு ஆண் பெண்ணை விட சிறிது அளவு எடை இருக்க வேண்டும் அவ்வளவே.
ஒரு ஆண் பெண்ணை விட சிறிது அளவு உயரம் இருக்க வேண்டும். அவ்வளவே
ஆண் பெண் இருவரும் சேர்ந்து நின்றால் ஜோடி ஜோடி பொருத்தம் காண கச்சிதமாக இருக்க வேண்டும் அவ்வளவே.

இது இருந்தால் யோனி பொருத்தம் ஆயிரம் சதவிதம் உண்டு என்று அர்த்தம்.உங்கள் அட்டவணையில் புலி மான் என்று வந்தால் கூட அதை ஒதுக்குங்கள், இது இருந்தால் பொதும்.

இன்று நடப்தோ தலை கீழ்.....யோனி பொருத்தம் என்ற பெயரில் பல திருமண விழாவில் நான் பார்த்திருக்கிறேன் ....

ஒல்லி ஆணுக்கு மிக குண்டான பெண்ணும் (எடை பொருத்தம் இல்லை )
குண்டான ஆணுக்கு மிக ஒல்லி பெண்ணும் (எடை பொருத்தம் இல்லை )


ஆறு அடி உயரம் உடைய ஆணுக்கு ஐந்தடி உயரம் உள்ள பெண்ணும் (உயர பொருத்தம் இல்லை)
 
கருப்பு நிற ஆணுக்கு வெள்ளை நிற பெண்ணும் (நிற பொருத்தம் இல்லை)
வெள்ளை நிற ஆணுக்கு கருப்பு நிற பெண்ணும் (நிற பொருத்தம் இல்லை)

இவ்வாறு சற்றும் ஜோடி பொருத்தம் இல்லாமல் , வெறும் படிப்பறிவில்லாத ஜோதிடர், ஏதோ ஒரு மூடன் எழுதிய யோனி பொறுத்த அட்டவணை சரி பார்த்து சொன்னதால் திருமணம் பொருத்தம் இல்லாத இரு நபருக்கு திருமணங்கள் இன்று பெற்றோரர்களால் திணிக்கப்பட்டு நடக்கின்றது.

இதில் மிக பெரும் தவறு இளைப்பவர்கள் பெற்றோர்களே, காரணம் ஒரு மூட ஜோதிடர் சொன்னதை கேட்டு ஏன் இந்த கணினி யுகத்தில் செயல் பட வேண்டும் 

எடை, உயரம், நிறம் இந்த மூன்றும் பொருந்தினால் பொது யோனி என்பதெல்லாம் பொய்.

இன்னும் ஒரு படி மேலே சென்று யோனி பொருத்தம் இருந்தால் தான் குடும்பத்தில் அன்யோன்யம் இருக்கும் என்று சொல்லும் மூடர்கள் உண்டு.
 
இருவருக்கு இடையில் உண்யமான அன்பு மற்றும் காதல் இருந்தால் தான் அன்யோன்யம் தானாக வரும், யோனியல் அன்யோன்யம் வராது.
இருவருக்கும் இடையில் அன்பு இருக்க வேண்டும் என்றால் , இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும், ஜோதிடருக்கு பிடிதிருப்தர்காக இருவரையும் இணைக்க கூடாது.. 
 
சோதிடர்கள் மூடர்கள் ... அவர்களை நம்பி நீங்களும் மூடர்கள் ஆகாதிர்கள்...
Regards
P Renjith Kumar
  
 

Friday, March 20, 2015

Vasudeva sarvam iti - God is All! - The Meta Physics thoery

.

http://www.metaphysicalmusing.com/gita/krishna11.htm


If one of Krishna’s pearls could be said to sum up the entirety of primordial wisdom surely his declaration - Vasudeva sarvam iti - would be the one. God is All (VII.19).
 
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते . 
वासुदेवः सर्वमिति महात्मा सुदुर्लभः .. - १९.. 
 
bahūnāṃ janmanām ante jñānavān māṃ prapadyate
vāsudevaḥ sarvam iti sa mahātmā sudurlabhaḥ 7.19
 
The Sanskrit name Vasudeva literally means the God that dwells within. Vasu is the abode and the dweller. The God within abides in all beings. Krishna says that the high souled one who realizes that ‘God is All’ is hard to find.


Regards
P Renjith Kumar

The Pure Essence of India in a Single Picture

.

Saw this pic randomly.
This single picture is enough to show the essence of India.
A old lady by looks seems to be spiritual and have attained the wisdom of live bows to the worlds most sacred creature. This is equivalent to the bowing to God. Look at the graceful look of the sacred Cow, Its the most divine. This pic is worth priceless. Credits to who ever took it.
 
We Indians see God in Everything. "Vasudeva Ithi Sarvam ( God is All )" - Bhavagad Gita 7-19.


The Essence of India. Bow and Respect to worlds most sacred creature
 
 

Regards
P Renjith Kumar

Monday, January 19, 2015

Health and Fitness

.

Best Breakfast and Best Indian Food recognized by WHO.

 
 
 
Regards
P Renjith Kumar
 
 


Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துகள்

.
இன்று சூரியனையும் நாளை மாடுகளை தெய்வமாக , மறுநாள் உழவர்களையும் , உழவு தொழில் சாதனங்களையும் வழிபடப் போகும் தமிழர்களுக்கு என் நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

உலக நாகரிங்களில் எங்கெல்லாம் சூரிய வழிபாடு இருக்கிறதோ அதுவெல்லாம் பழமையான நாகரீகம் என்று எடுத்து கொள்ளலாம்.இந்த உலகுக்கு உணவு கொடுத்து உதவும் பயிர்களுக்கு உயிர் தான் சூரிய ஒழி, அதை உலக உயிர்களுக்கு கொடுத்த சூரியனுக்கு நன்றி கூறும் திருவிழா தான் பொங்கல். சூரியன் மட்டும் அல்லாமல் உழவுக்கு துணை புரிந்த மாடுகளையும் நன்றி கூறும் கலாச்சாரம் பழமைக்கெல்லாம் பழமை வாய்ந்தது.
நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தான் பூமியின் உயிர்ப்புக்கு ஆதாரம். எனவே புது நெல் அரிசியை நிலத்தில் மடியில் மண் பானையால், நெருப்பு கொண்டு, நீர் ஊற்றி கொதிக்க வைத்து, காற்றில் பொங்கி வர, ஆகாயத்தில் இருக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு அற்புத விழா, இது இயற்கை அன்னையை கொண்டாடும் விழா.

Regards
Renjith

Monday, January 12, 2015

மார்கழி திங்கள் - திங்கள் கிழமை

.

பொதுவாக திங்கள் கிழமை எனக்கு மிகவும் பிரியமானது. சோமவாரம் அதாவது திங்கள் கிழமை சிவனுக்கு உகந்தது என்பதால் இன்னும் பிரியம் . சோமநாதர் என்று ஒரு ஜோதிர் லிங்க பெயரும் கூட அமைந்தது இதன் பெருமையை கூறும்.

அப்படி பட்ட திங்கள் கிழமை நன்னாளில் எந்த ஒரு முக்கியமான செயலும் செய்ய எனக்கு விருப்பம்.

உலக நலன் மட்டுமே சிவன் அருளும் திங்கள் கிழமைகளில் எனது சிந்தனையில் இருக்கும், என்னை பற்றி என்னும் சுயநலம் இருக்காது. உபவாசம் இருக்கும் பெரும் பேரு சிலநாள் எனக்கு சிவன் அருளால் கிட்டும். என் தாயும் உபவாசம் இருக்கும் பேரு சிவன் அருளால் கிட்டும். கோவையில் எனது இல்லம் அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் திருகொவிலுக்கு என் தாயும் தந்தையும் திங்கள் கிழமை நன்னாளில் சென்று வழிபடுவது வழக்கம்.

அப்படி பட்ட திங்கள் கிழமை மார்கழி மாதம் வந்தால் அது இன்னும் விசேஷம் இல்லையா?

எனவே தான் நான் இவ்வளவு நாள் தனியாக தொகுத்து வந்த திருப்பவை மற்றும் திருவெம்பாவை தொடரை மார்கழி திங்கள் - திங்கள் கிழமை அன்று நிறைவு செய்கிறேன்.இந்த தெய்விக பாடல்களின் தொகுப்பு ஒருவருக்கு பயன்பட்டாலும் இதை கடவுளின் அருளாக கருதுவேன்.


அனைவருக்கு சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.

உண்மையான பக்திக்கு ஆண்டாள் உதாரணம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் 
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!



என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம் ...
மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்
!


என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு கூறுகிறார்.


**வாழி ஆண்டாள் அன்னையின் திருநாமம்**


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைவாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே



சிவ வழிபாடு ...

ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி.

காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.



ஈச்சனாரி விநாயகரே போற்றி
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தொட்டமன் சின்னம்மன் தாயே போற்றி

ஓம் நமோ நாராயணாய
ஒம் நம சிவாய 


Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 30 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !



 "இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 30

.


 
 

பாசுரம்
 
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை  அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.



பொருள்

திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை
சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து
விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு),
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை
அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த
திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள்
நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால்
திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 29 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !


விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 29

.
 
 
 

பாசுரம்
 
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து,  உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்  உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.


பொருள்

மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்
 
 

திருவெம்பாவை பாடல் - 28 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !


முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 28

.
 
 
 

பாசுரம்
 
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து  உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா  உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம்.
அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள்
உன்னை எங்களுடன் குலத்தவனாக பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம்
எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா!
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது
அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள்,
அன்பால் அழைத்தைப் பொறுத்துக் கோபம் கொள்ளாமல்
எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்




திருவெம்பாவை பாடல் - 27 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !


"அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.
Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 27

.

 
 
பாசுரம்
 
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!  உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.




பொருள்

பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 26 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !


விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 26

.
 
 
 

பாசுரம்
 
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே;
ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 25 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !


"பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.



Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 25

.


 
 

பாசுரம்
 
ஒருத்தி மகனாய்ப் பிறந்து,  ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தா¢க்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!  உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோ

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 24 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !


ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
    (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 24

.
 
 
பாசுரம்
 
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மஹாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
தென் இலங்கையைச் சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்!
சகடாசுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழை போற்றுகிறோம்!
கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரிகருவியாகக் கொன்றாய்! உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே! உன் குணத்தைப் போற்றுகிறோம்!
பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம்!
இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்களை
நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம், நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.


Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 23 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.

கூவின பூங்குயில்; கூவின கோழி;
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !


குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்


Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருப்பாவை பாசுரம் - 23

.
 
 
 

பாசுரம்
 
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!  உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,  கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து,  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

மழைக் காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும்
வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து
உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்துக்
கர்ஜனை செய்து வெளியில் வருவது போல
காயம்பூ போன்ற நீல நிறமுடையவனே,
நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து,
நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

திருவெம்பாவை பாடல் - 22 ( திருப்பெருந்துறையில் அருளியது )

.
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !




 அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன்
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற)
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்