Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 25

.


 
 

பாசுரம்
 
ஒருத்தி மகனாய்ப் பிறந்து,  ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தா¢க்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!  உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்
யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,
அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த
கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!
எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து
வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்
லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்
உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோ

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: