Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துகள்

.
இன்று சூரியனையும் நாளை மாடுகளை தெய்வமாக , மறுநாள் உழவர்களையும் , உழவு தொழில் சாதனங்களையும் வழிபடப் போகும் தமிழர்களுக்கு என் நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

உலக நாகரிங்களில் எங்கெல்லாம் சூரிய வழிபாடு இருக்கிறதோ அதுவெல்லாம் பழமையான நாகரீகம் என்று எடுத்து கொள்ளலாம்.இந்த உலகுக்கு உணவு கொடுத்து உதவும் பயிர்களுக்கு உயிர் தான் சூரிய ஒழி, அதை உலக உயிர்களுக்கு கொடுத்த சூரியனுக்கு நன்றி கூறும் திருவிழா தான் பொங்கல். சூரியன் மட்டும் அல்லாமல் உழவுக்கு துணை புரிந்த மாடுகளையும் நன்றி கூறும் கலாச்சாரம் பழமைக்கெல்லாம் பழமை வாய்ந்தது.
நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தான் பூமியின் உயிர்ப்புக்கு ஆதாரம். எனவே புது நெல் அரிசியை நிலத்தில் மடியில் மண் பானையால், நெருப்பு கொண்டு, நீர் ஊற்றி கொதிக்க வைத்து, காற்றில் பொங்கி வர, ஆகாயத்தில் இருக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு அற்புத விழா, இது இயற்கை அன்னையை கொண்டாடும் விழா.

Regards
Renjith

No comments: