Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 21

.
 
 
 

பாசுரம்
 
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்!  உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.



பொருள்

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய
தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை
அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக்கொள்!
சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்
அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.
எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்
கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல
நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்


No comments: