Monday, January 12, 2015

திருப்பாவை பாசுரம் - 27

.

 
 
பாசுரம்
 
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!  உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.




பொருள்

பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)
தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்
நாங்கள் அணிவோம். அதன் பின்னே
முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை
எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்

Thanks:
http://thiruppavai.pressbooks.com/

Regards
P Renjith Kumar
ப ரஞ்சித் குமார்

No comments: