Sunday, August 1, 2010

“அமுதம் உண்டு விஷமும் உண்டு” - 2

.
2. நட்பு

ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.

நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .

நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு


நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784


நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து கொல்லவில்லை இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம். அதை பற்றி இப்போது பார்ப்போம்.


மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான்.  அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.


இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.


இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.


இன்று உலகின் தலை சிறந்த ERP software என்னும் அணைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த சாப்ட்வேர்ரை வடிவமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அணைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அணைத்து முன்னணி நிறுவனங்களை இயக்குவது SAP என்னும் மென்பொருள் தான்.


இந்தியாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது படிப்பு மற்றும் அயராத உழைப்பு காரணமாக முன்னேறிய ஒரு இளைஞன் தனது அலுவலகத்தில் தனை போல் சிந்திக்க கூடிய எழு நண்பர்களை அரவணைத்து அனைவரது உழைப்பாலும் முயற்சியாலும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினர் . அந்த நிறுவனம் இன்று உலக பிரசித்தி பெற்ற infosys நிறுவனம் ஆகும். கல்லூரியில் நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவ மனைவிக்கும் Infosys இன்போசிஸ் என்னும் நிறுவனத்திற்குள் நுழைவது ஒரு கனவாகும். இத்தகைய ஒரு சாதனை, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம கொண்ட ஏழு நண்பர்களால் முடிந்தது. இது தான் நட்பின் வலிமை.


இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787


நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.


பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும். அதாவது பத்தாம் வகுப்பு வரை மிக நன்றாக பள்ளியில் படித்த ஒரு மாணவன் புது பள்ளிக்கு செல்லும் பொது அங்கே புது நண்பர்கள் கிடைகின்றனர் அவர்களிடம் அந்த நல்ல மாணவன் நட்பு பாராட்டுகின்றான். அந்த நண்பர்கள் அவன் மிது ஏற்படுத்தும் தாக்கம் அவன் இரண்டு வருட பள்ளி படிப்பை நிர்ணயம் செய்கின்றது. அதாவது அதுவரை கல்வி மேல் நாட்டம் கொண்ட ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுதுபோக்கிலும் , திரைப்படத்திலும் நட்டம் ஏற்பட வைக்கிறது. அந்த வயதில் நட்பு மீது தான் அதிக மரியாதை இருக்கும் எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் விண்ணாகி விடும். ஒரு மருத்துவராகவோ  அல்லது பொறியாளராகவோ  வர வேண்டிய ஒரு மாணவனை கேடான நட்பு கடைசியில் மிக மோசமான நிலைமையில் கொண்டு சேர்த்து விடும்.


ஆனால் அதே நேரத்தில் நல்ல நண்பர்களை சேர்த்து கொண்டு அனைவரும் சேர்ந்து படித்து எல்லோரும் கருத்துகளையும், சந்தேகங்களையும் பரிமாறி படித்து மிக நல்ல மதிப்பெண் பெற்று மிக நல்ல கல்லூரியில் சேரும் பல நல்ல மாணவர்களை இப்போது நாம் பார்க்கலாம். அந்த காலத்து சில மோசமான சினிமாகளில் பள்ளி/கல்லூரி  என்றல் பொழுதுபோக்கும் இடம் போல கட்டி இருப்பார்கள் அதை பார்த்து கேட்டு போனவர்கள் சிலர் உண்டு ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. இருபினும் மாணவர்களே உங்கள் நண்பனை தேர்ந்து எடுக்கும் பொது கவனமாக இருங்கள், உங்கள் நல்ல உயர்ந்த லட்சியத்தை உக்க படுத்தும், அதற்கு துணை புரியும் ஒருவனை நண்பனாக தேர்ந்து எடுங்கள். உங்களை ஊர் சுற்ற வைத்து, மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமை அக்க வைக்கும் ஒருவனை மறந்தும் கூட  உங்கள் நண்பனாக அக்கி விடாதீர்கள்.


உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும்  பொது மட்டும் உடன் இராமல் நீங்கள் அழும பொது அறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்

"A real friend is one who walks in when the rest of the world walks out."

அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன்  ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.

அரிஸ்டாடில் என்னும் உலகின் சிறந்த கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா.

“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.

கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்

"My best friend is the one who brings out the best in me."

எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.

இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகேறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் பனி புரியும் சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள். இப்போது பல பெண்களும் தங்களுக்கு வரன் பார்க்கும் பொது சோசியல் ட்ரின்கர் என்றால் பரவையில்லை என்று குறும் அளவிற்கு நாம் ஆளாகி  உள்ளோம். ஆனால் பாவம் அந்த பெண்கள் ஒரு முறை குடித்தாலும் நூறு முறை குடித்தாலும் அவன் குடிகாரன் தான் என்பதை உணர மறுக்கின்றனர். நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.


மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.


மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு கட் அடித்து எப்போது ஊர் சுற்றும் மாணவர்களும், நட்பு என்ற பெயரில் ஆபாச நடனம் மற்றும் கும்மாளம் போடும் ஹோட்டல் மற்றும் பப்களிலும் நீங்கள் தாரளமாக பார்க்கலாம். இவர்கள் அனைவரும் வாழ்கையில் நட்பினால் கெட்டு  போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.


மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை  யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம்  விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பகு படுத்துங்கள்.


இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படு வருபது வருத்தம் தருகின்றது. ஒரு கட்சியில் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு அரசியில்வாதி அடுத்த கட்சி சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனை கட்சிக்காக இழிவாக மேடையில் பேசுகிறான். ஆக அவன் கட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று பதவிக்காக, பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் துகி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். அக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நேரிய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.


உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.


எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தொல் கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .


கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பாரில் ஸ்காட்ச் அடிக்க உதபுவனும், பப்பில் ஆட்டம் போட்டு ஒடுபவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.

உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.

நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .

தொடரும் ....

No comments: