.
பிரதோஷக் காலம்
இச்சம்பவந் நடக்கின்ற காலநேரத்தே பிரதோஷ காலமென்றனர். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.
பிரதோஷ வகைகள்
நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
பக்ஷப் பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி
மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்
திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிட்டும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் - சுகவாழ்வு
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிட்டும்
தொடரும் .....
By
P Renjith Kumar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment